மழைநீர் வடிகால் பணிக்காக நாளை முதல் 3 நாட்களுக்கு காந்தி இர்வின் பாலத்தில் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈ.வே.ரா சாலையில் காந்தி இர்வின் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையில் பள்ளம் தோண்டி சாலை குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கு வசதியாக நாளை (3-ம் தேதி) இரவு 10 மணி முதல் வரும் 5-ம் தேதி திங்கள்கிழமை காலை 5 மணிவரை இப்பகுதிகளை சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈ.வே.ரா சாலையில் சென்ட்ரல் மற்றும் ஈ.வி.கே சம்பத் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல தடை ஏதும் இல்லை. எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வே.ராசாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது.

அத்தகைய வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பால டாப் (Top) சிக்னல்சந்திப்பிலிருந்து (தாள முத்து நடராஜர் மாளிகை சந்திப்பு) இடதுபுறம்திரும்பி, காந்தி இர்வின் சாலை,உடுப்பி பாயின்ட் வலதுபுறம் திரும்பி,நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை சந்திப்பில் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி செல்லலாம். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE