மேமாதத் தொடக்கத்தில் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் கோடை விடுமுறைக்காகத் தாய் வீடு செல்லும் மனைவியரைக் குதூகலத்துடன் வழியனுப்பிய கணவன்மார்களைக் கண்டிருக்கலாம். ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என்று ‘அக்னி நட்சத்திரம்’ லக்ஷ்மிபதி போல ஆனந்தமாக வீடு திரும்பிய அன்னார்கள், விட்டு விடுதலையாகும் சிட்டுக்குருவி போலச் சொற்ப நாள்களேனும் சுதந்திரத்தைக் கொண்டாடலாம் என்று திட்டமிட்ட அப்பாவிகள்.
ஆனால், ஆரம்பகட்ட ஆனந்தம் மெல்ல மெல்லத் தொல்லையாகி அவஸ்தை ரூபத்தை எட்டியபோது மனைவியே ‘மனம் கண்ட தெய்வம்’ எனும் இறுதி முடிவுக்கு அந்த ஆன்மாக்கள் வந்ததுதான் வெப் சீரிஸ்களிலும் இல்லாத வித்தியாசத் திருப்பம். ஏறத்தாழ அரை மாதக் கால பிரம்மச்சாரி வாழ்வுக்குப் பின்னர், பேருந்து நிலையங்களில் பேயறைந்த தோற்றத்துடன் மனைவிமார்களை வரவேற்கக் காத்திருந்தவர்களின் முகமே சொல்லிவிடும் அவர்கள் பட்ட அவஸ்தைகளை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்