வண்ணக் கிளிஞ்சல்கள் 20 - ஜோக் அருவியில் கிடைத்த ஆசிர்வாதம்!

By பாவண்ணன்

“பால்குடத்த கவுத்த மாதிரி ஜோக் எப்படிக் கொட்டுது பாருங்க” என்று அருவியின் பக்கம் சுட்டிக்காட்டினார் நண்பர். பார்வையாளர் தடுப்புவளையத்துக்கு அருகில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். சீறிப் பொங்கி விழும் அருவியின் வேகத்தைப் பார்த்ததும் பித்துப் பிடித்ததுபோல இருந்தது. ஒரே தாவாகத் தாவி அருவியோடு சேர்ந்து நாமும் விழ வேண்டும் என்று மனம் துடித்தது.

“ஆயிரம் அடி ஆழம் சார். ஷராவதி ஆறு நாலு திசையிலிருந்தும் ஓடிவந்து இங்க ஒரே அருவியா சங்கமமாவுது. கொழந்தைக்குப் பேரு வைக்கற மாதிரி ஒவ்வொண்ணுக்கும் ஒரு பேரு வச்சிருக்காங்க. ஒண்ணு ராஜா. இன்னொண்ணு ராணி. பக்கத்துல இருப்பது ரோரர். அடுத்தது ராக்கெட்.” நண்பர் உற்சாகத்தோடு அருவியைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர் சொற்கள் எதுவும் என் நெஞ்சில் பதியவில்லை. அருவியின் நிறம், வேகம், பளபளப்பு, சாரல், தெறிக்கும் துளிகள் மட்டுமே நினைவில் பதிந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE