சென்னையில் 1960களில் பல இசைக் குழுக்கள் தோன்றின. அவற்றில் காமேஷ் - ராஜாமணி இசைக்குழு தென் சென்னையிலும், குணாளன் - நிர்மலா இணையரின் ‘ஜோதி’ இசைக் குழு வட சென்னையிலும் மிகவும் பிரபலம். முதன்மையான இந்த இரண்டு இசைக் குழுக்களிலிருந்து பல இசைக்குழுக்கள் தோன்றின. இன்றைக்கும் வட சென்னையில் பக்தி இசை நிகழ்ச்சிகளை குணாளன் நடத்திக்கொண்டிருக்கிறார்.
1970களில் ‘மியூசியானோ’ இசைக் குழுவைத் தொடங்கி இசை மேடைகளில் பிரகாசித்தவர் ஏ.வி.ரமணன். இந்த வரிசையில் 1975களில் உதயமான இசைக்குழு ஸ்ரீதரின் ‘நவராக்ஸ்’. அண்மையில் நவராக்ஸின் 50ஆவது ஆண்டைக் கொண்டாடும் இசை நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் விமரிசையாக நடந்தது. 50 பாடகர்கள் பங்கேற்றுப் பாடினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்