அந்தக் கால மறுவீடு | ‘எம் மச்சான் எங்கே இருக்காக?’

By பாரததேவி

அந்தக் காலத்தில் கல்யாணம் முடிந்துவிட்டால் மாப்பிள்ளையும் பெண்ணும் மூன்று மாதங்களுக்கு ஒன்றுசேரக் கூடாது. மூன்று மாதங்களுக்குப் பிறகு பெரிய மறுவீடு என்று ஒன்று நடத்துவார்கள். அப்போதுதான் பெண்ணுக்குத் தாலி பிரித்துப் போட்டு, பண்டம் செய்து பனைநார்ப் பெட்டியில் வைத்து, புதுப் பெண்ணின் கையில் ஒரு குத்துவிளக்கையும் ஒரு பசுமாட்டையும் சீதனமாகக் கொடுத்து மாப்பிள்ளை வீட்டில் விடுவார்கள்.

அந்த மூன்று மாதங்களும் மாப்பிள்ளை, மாமியார் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் நெல்லுச்சோறு அரிதானது. ஆனாலும், இந்த மாப்பிள்ளைக்குத் தினமும் நெல்லுச்சோறும் கறிக்குழம்புமாகத்தான் போட வேண்டும். வசதியானவர்கள் ஓர் ஆட்டையோ கிடாவையோ அறுத்து, உப்புக்கண்டம் போட்டு வைத்துக்கொண்டு நாள்களைக் கடத்துவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE