சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தேன். தென்றல் உடலோடு சேர்த்து மனதையும் வருடியது. வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்கள் கடலின் பிரம்மாண்டத்தையும் அலைகளின் ஆர்ப்பாட்டத்தையும் வியப்புடன் ரசித்துக்கொண்டிருந்தனர். ஆயிரம் முறை பார்த்து ரசித்தாலும் அடுத்தமுறை பார்க்கத் தூண்டுவது கடல்தான்!
எட்டாம் வகுப்புப் படித்தபோது பள்ளியிலிருந்து எங்களை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். அதுதான் என் முதல் சுற்றுலா. கடலைக் கண்டதும் பரவசமாக இருந்தது. நண்பன் பாலு, “இவ்வளவு தண்ணியை யார் கொண்டு வந்து இங்கே ஊத்தியிருப்பாங்க?” என்று வெகுளியாகக் கேட்டான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்