சமுகப் பொறியாளர்கள் 04: உயிர்களிடத்து அன்பு காட்டும் ‘ஸ்நேக்’ விஜய்

By ஆர்.சி.ஜெயந்தன்

தெருமுனையிலிருந்து 100 மீ. தொலைவில் இருக்கிறது அந்த நாய்கள் காப்பகம். அப்படியிருந்தும் விஜய் ஓட்டிவரும் ஸ்கூட்டரின் ஒலியைத் துல்லியமாக அடையாளம் கண்டு நாய்கள் குரைத்தன. அவற்றின் குரைப்பில் இருக்கும் உற்சாகத்தைப் புரிந்துகொண்டு குட்டி நாய்கள் ‘ஊ... ஊ...’ என்று குழைந்தன. உணவுடன் வரும் விஜய்யை நாய்கள் சூழ்ந்துகொண்டன. வரிசையாக இருக் கும் தட்டுகளில் உணவை அள்ளி அள்ளிப் போட, வயிறார உண்டு மகிழ்ந்தன. 9 மாதக் குட்டிகளுக்குத் தனி ‘ஷெட்’.

வளர்த்தவர்களால் கைவிடப் பட்ட நிலையில் உணவும் நீரும் கிடைக்காமல், மெலிந்தும் தோல் நோய்த் தொற்றுக்கு ஆளாகியும் வாகனங்களில் அடிபட்ட காயங்க ளோடும் ஆதரவின்றித் திரிந்து கொண்டிருந்த 140 நாய்களையும் 40 குட்டிகளையும் மீட்டு அடைக்கலம் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த்! திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருக்கிறது இவர் அமைத்துப் பராமரித்து வரும் ‘அறண் காப்பகம்.’

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE