அந்தக் கால விளையாட்டுகள்: கிந்தி முடிந்ததும் சில்லாங்குச்சி

By பாரததேவி

அந்தக் காலத்தில் செலவே இல்லாமல் பிள்ளைகளாகக் கூடி விளையாடினார்கள். விளையாட்டில் பல வகை உண்டு. நாள் முழுக்கச் சொல்லிக்கொண்டே போகலாம். வெறும் பனையோலை, சோளத்தட்டை, சிறுகுச்சிகள், புளியங்கொட்டைகள் போன்றவையே அந்தக் காலத்தில் விளையாட்டுப் பொருள்களாக இருந்தன. அரசர்களின் காலத்திலிருந்து இப்போது வரைக்கும் அழியாமல் இருப்பது கண்ணாமூச்சிதான். எல்லாரும் கண்ணைத் திறந்திருக்கையில் ஒருத்தி மட்டும் கண்ணை மூடிக்கொண்டு, ‘சாட், பூட், த்ரீ...’ என்று கூட்டத்தில் ஒருத்தியைத் தொடுவாள்.

தொடப்பட்ட பெண்தான் கண்ணைப் பொத்திக்கொள்வாள். மற்ற எல்லாரும் ஓடி ஒளிந்துகொள்வார்கள், அவள் தொட வேண்டும். இதுதான் எங்கள் காலத்து கண்ணாமூச்சி. செதுக்கு முத்து. இந்த விளையாட்டுக்குத் தரையில் ஒரு வட்டம் வரைந்துகொள்வார்கள். அதனுள் ஆளுக்கு 20 முத்து என்று புளியங்கொட்டையை எண்ணிப் போடுவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE