வீட்டின் மூட்டை முடிச்சுகள் எல்லாம் வரவேற்பறையின் மொத்த இடத்தையும் அடைத்திருக்க, கிடைத்த இடத்தில் நான் உட்கார்ந்திருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்துவிட்டார் என் அப்பா. வேறு ஒரு குடும்பம் வீட்டின் மற்ற அறைகளை ஆக்கிரமித்திருந்தது, அவரது பார்வையில். இரண்டு நாள்களுக்கு முன்பு சாமான்களை மூட்டைக் கட்டி முடித்திருந்தோம். அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகியிருந்தது. குறைந்தபட்ச பொருள்களோடு அம்மா, தம்பி, தங்கைகள் சென்றுவிட்டனர். மூன்றாம் நாள் வீட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் லாரியில் ஏற்றிக்கொண்டு போக அப்பா வந்திருந்தார்.
நாங்கள் குடியிருந்தது ஆர்.டி.ஓ குவார்ட்டர்ஸ். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேறு ஊரிலிருந்து மாற்றல் பெற்றுவந்த உயரதிகாரியின் குடும்பம், லாரியோடு எங்கள் வீட்டு முன்வந்து நின்றது ஓர் இரவுப்பொழுது. நாங்கள் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகத் தவறான தகவலின் பேரில் இவர்கள் வந்துவிட்டிருந்தனர். அந்த உயரதிகாரி என்னைத் தனியே அழைத்து, “எதிர்பாராமல் நேர்ந்த தவறு. இந்த இரவில் எங்கே செல்ல முடியும்? ஓர் அறையில் மூட்டைகளுடன் நீங்கள் தங்கிக்கொண்டால், நான் நன்றிக்குரியவனாக இருப்பேன்” என்று கேட்டுக்கொண்டபோது, அதைத் தவிர வேறு வழியேதும் எனக்கு இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்