உதவிய கரங்கள்: சென்னையை மீட்டெடுத்த மனிதம்

By எல்னாரா

மிக்ஜாம் புயல் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத சேதத்தை சென்னையில் ஏற்படுத்தியிருக்கிறது. உயிர் இழப்புகள், வீடு, வாகனம், விலங்குகள் சேதம் என மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மெதுவாக மீண்டெழுந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து வாழ்வை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இவற்றுக்கிடையே மிக்ஜாம் புயல் பல மனித நேயமிக்க நிகழ்வுகளை நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறது.

கரம் கொடுத்த வியாசை தோழர்கள்: வியாசர்பாடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கிய மக்களை மீட்டதில் அங்குள்ள தன்னார்வ அமைப்பான ‘வியாசை தோழர்கள்’ பங்கு அளப்பரியது. மிக்ஜாம் புயலால் முல்லை நகர், சத்யமூர்த்தி நகர், எம்.கே.பி. நகர், பி.பி. ரோடு பகுதிகளில் உள்ள மக்களை மீட்டதுடன், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கவும் இந்த இளைஞர்கள் வழிசெய்திருக்கிறார்கள். கொட்டும் மழையில் ஓடி, ஓடி உழைத்த இந்த இளைஞர்கள் கரோனா காலத்திலும் மக்களின் நாயகர்களாக வலம்வந்தனர். மேலும், வியாசர்பாடி பகுதி குழந்தைகளுக்காக இரவுப் பள்ளிகளை இந்த அமைப்பினர் நடத்திவருகிறார்கள். வடசென்னை இளைஞர்களை வன்முறையின் பக்கம் பயணிப்பவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படத்துறைக்கு ‘வியாசை தோழர்கள்’ தங்கள் செயல்கள் மூலம் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

20 mins ago

வணிகம்

45 mins ago

உலகம்

36 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்