திண்ணைப் பேச்சு 26: சைக்கிளுக்கு லைசென்ஸ்!

By தஞ்சாவூர்க் கவிராயர்

தில்லியில் பள்ளிகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். காற்றுமாசு நுரையீரலை மட்டும் பாதிக்க வில்லை, கல்வியையும் பாதித்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் புகைமூட்டம். தலைநகருக்கே இந்த நிலை! காற்று மாசு சென்னையையும் விட்டுவைக்க வில்லை. தேவை உடனடித் தீர்வு! ‘வீட்டுக்கொரு மரம் வளர்ப் போம்' என்கிற கோஷம் புகை கக்கியபடி செல்லும் வாகனங்களின் பின்புறம் எழுதப்பட்டிருக்கிறது. சீனாவில் பெய்ஜிங் போன்ற பெருநகரங்களில் எப்போதோ சைக்கிளுக்கு மாறிவிட்டார்கள். அது மட்டுமல்ல, சீனாவில் பொதுப் போக்குவரத்து அதிகப்படுத்தப்பட்டு, தனியார் வாகன நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் முன் எப்போதைவிடவும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிகரித்திருப்ப தாகப் புள்ளி விவரம் கூறுகிறது. ‘வீட்டுக்கொரு சைக்கிள் வாங்குவோம்’ என்கிற புதிய கோஷம்தான் புகை மூட்டத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE