அச்சமூட்டும் சர்வதேச பொருளாதார நெருக்கடி

By செய்திப்பிரிவு

சமீப காலமாக குறைந்துவரும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), பண மதிப்பு சரிவு, வட்டி விகித உயர்வு, உணவு, எரிபொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய நிலையில் பொருளாதார பின்னடைவை தவிர்க்க முடியாது என உலக வங்கி தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) இந்த ஆண்டு உலகின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 2.2 % ஆக இருக்கும் என்றும், ஆனால் முன்பு யூகிக்கப்பட்ட3.1% வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பொதுவாக பொருளாதார நெருக்கடி என்பது தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு ஒரு நாட்டின் ஜிடிபி குறைவதை குறிக்கும். ஒரு நாட்டின் ஜிடிபியில் முதலீட்டுச் செலவும் நுகர்வுச்செலவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இரண்டுமே குறையும் போது வளர்ச்சி வேகம் குறையவே செய்யும்.
கரோனா தாக்கத்துக்குப் பிறகு பொருட்களின் உற்பத்தி சுணக்கமும், தேவை அதிகரிப்பும் பணவீக்கத்தை அதிகரித்தன. இதனிடையே ரஷ்யா - உக்ரைன் போரும் சேர்ந்து கொண்டு பணவீக்கத்தை மேலும் அதிகரித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE