‘மனிதர்களே, நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்களா?’ (Are you scared yet, human?) என்ற தலைப்பில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘தி கார்டியன்’ இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்தக் கட்டுரையை எழுதியது மனிதர் அல்ல. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் ‘ஜிடிபி 3’ என்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மென்பொருள். ‘செயற்கை தொழில்நுட்பத்தைக் கண்டு மனிதர்கள் பயப்படத் தேவையில்லை’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு அந்த மென்பொருளில் உள்ளீடு செய்யப்பட்டது. அந்தத் தலைப்பின் கீழ் அந்த மென்பொருள் தானாக எழுதிய கட்டுரைதான் அது.
தற்போது ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் 'சேட் ஜிபிடி' (chatGPT) மென்பொருள் உலகை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கிட்டத்தட்ட எந்திரன் படத்தின் சிட்டி ரோபோ போல கேட்ட கேள்விகளுக்கு பதிலை எவ்வித தாமதமும் இன்றித் தருகிறது. ஷேக்ஸ்பியர் வசனத்தில் தன் காதலிக்கு காதல் கவிதை எழுதித் தரச்சொல்லி காதலன் வைக்கும் கோரிக்கையை கூட நிறைவேற்றித் தருகிறது அந்த மென்பொருள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்