நவீன தொழில்நுட்பங்களையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி கல்வி வழங்கும் நிறுவனங்கள் ‘எட்டெக்’ (EdTech) நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுப் பயன்பாட்டில் ‘ஆன்லைன் கல்வி நிறுவனங்கள்’ என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கரோனா காலகட்டத்தில் எட்டெக் நிறுவனங்கள் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டின. அமெரிக்காவுக்குப் பிறகு, இணையம் வழியே கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தச் சூழலில் இந்திய எட்டெக் சந்தை உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. 2020-ல் இத்துறையின் சந்தை வாய்ப்பு 2.8 பில்லியன் டாலராக (ரூ.22,680 கோடி) இருந்தது. 2025-ல் அது 10 பில்லியன் டாலராக (ரூ.81,000 கோடியாக) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்