யானையைப் பிடித்தவர்தான் பாக்கியசாலி

By சுப.மீனாட்சி சுந்தரம்

ஸ்டீவ் கப்லானின் ‘யானையை குறிவையுங்கள்' (Bag the Elephant) என்ற ஆங்கில நூல், யானைகள் என்று சொல்லக்கூடிய பெரிய வாடிக்கையாளர்களை பெற்று, தக்கவைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தை வெற்றியடைய செய்ய முடியும் என்கிறது. பெரிய வாடிக்கையாளர்களை எப்படி கண்டுபிடிப்பது, பெரிய வாடிக்கையாளர் நிறுவனங்களுடன் உறவை எவ்வாறு வளர்ப்பது என்பதை இந்த நூல் சொல்கிறது. அத்துடன் ஒரு பெரிய வாடிக்கையாளரைப் பெற்ற பிறகு பொதுவாக வணிக நிறுவனங்களும் அவற்றை நடத்துபவர்களும் அல்லது அங்குள்ள நிர்வாகிகளும் செய்யக்கூடிய தவறுகளைப் பற்றியும் எச்சரிக்கிறது.

பெரிய வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நீண்டகால அடிப்படையில் அதிகரிக்கும். ஆனால் அது ஒரே இரவிலோ அல்லது தற்செயலாகவோ நடக்காது. அதற்கு உங்களிடம் ஒரு புத்திசாலித்தனமான, பெரிய ‘பிசினஸ் கேம் ப்ளான்’ தேவை. பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் வளர்ச்சி, வாய்ப்புகள், நிலையான பணப்புழக்கம், அதிகரித்த விற்று முதல், வருமானம் கிடைக்கும். மேலும் ஒரு பெரிய நிறுவனத்
துடன் பணிபுரியும்போது உங்களது வணிக கலாச்சாரத்திலும் வளர்ச்சி ஏற்படும் என்கிறது இந்த நூல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE