இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டம் பனோ கிராமத்தில் 1958-ம் ஆண்டு பிறந்தவர் ஜெய் சவுத்ரி (65). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாகத் மற்றும் சுர்ஜீத் சவுத்ரி தம்பதிக்கு 3-வது மகனாக பிறந்தார் ஜெய். துசாரா கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு தினமும் 4 கி.மீ. தூரம் நடந்து சென்று படித்தார். இவருடைய ஊரில் அப்போது மின்சார வசதி கூட இல்லை.
பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கிய இவருக்கு வாராணசி ஐஐடியில் இடம் கிடைத்தது. அங்கு மின்னணு பொறியியல் பட்டம் பெற்ற இவர், தனது 22 வயதில் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் தொழிற்சாலை பொறியியல், கணினி பொறியியல் மற்றும் சந்தைப்படுத்துதலில் முதுநிலை பட்டம் பெற்றார். ஹார்வர்டு பிஸ்னஸ் ஸ்கூலில் நிர்வாக படிப்பையும் முடித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்