நாடாளுமன்றத்தில் 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ஏஞ்சல் வரி’ ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதனால், நாட்டில் ஸ்டார்ட் அப் போல குறு, சிறு நிறுவனங்கள் தொடங்கி நடத்தும் புதிய, இளைய தொழில் முனைவோருக்கு சுலபமாகவும் கூடுதலாகவும் மூலதனத்துக்கான பணம் கிடைக்கும். மூலதனம் இல்லாமல் ஒரு தொழிலையோ வியாபாரத்தையோ தொடங்க முடியாது.
ஆனாலும், இப்போது தொடக்க கால முதலீடு இல்லாமலேயே ஸ்டார்ட்அப் தொடங்குபவர்கள் உண்டு. என்ன அற்புதமான யோசனையாக இருந்தாலும், திட்டங்களை செயல்படுத்த மூலதனம் வேண்டும். வங்கிக் கடன்கள் மூலதனம் ஆகாது. தவிர, கடன் வாங்கினால் அதற்கு, வியாபாரத்தில் லாபமோ நட்டமோ, முதல் மாதத்தில் இருந்தே, ஒப்புக்கொண்ட அளவு வட்டி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்