வணிகவழி வேளாண் சுற்றுலா 05: மாணவர்களுக்கு வேளாண் கல்வி

By முனைவர் செ.சரத் 

நெல் இன்னமும் மரத்தில்தான் விளைகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும் சில மாணவர்களிடத்தில் வேளாண் கல்வியை, அதன் அனுபவத்தை நாற்று நடுவதிலிருந்து வளர்ந்த நெல்மணிகளுடன் உறவாடுவது வரை எடுத்துச்செல்ல ஆகச்சிறந்த வழி வேளாண் சுற்றுலாதான். பள்ளிமற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த செய்முறை வகுப்புகளை அனுபவப் பாடங்களாக கற்றுக்கொடுக்க வேளாண் சுற்றுலா வழிவகுக்கும்.

வேளாண் சுற்றுலாவில் இருக்கும் சுவாரசியமே எதனையும் ரசனையுடன் கண்டுணரும் தருணம்தான். என்னதான் ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை உட்கார வைத்து மரம், செடி, கொடி வகைகள் பற்றியும் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் பற்றியும் உரக்கக் கூறி பாடம் நடத்தினாலும், அவர்களை வேளாண் பண்ணைக்கு அழைத்துச் சென்று கைப்பட பழங்களை ரசித்து அறுவடை செய்ய வைத்து ருசிக்கச் சொல்லும்போது அதனின் தனிச்சுவை மூலம் அவர்கள் கற்றுக்கொள்ளும் பாடம் அலாதியானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE