சிஏ பணியை உதறிவிட்டு மாதந்தோறும் ரூ.4.5 கோடி சம்பாதிக்கும் ஐஐஎம் பட்டதாரி

By Guest Author

கவுரவமான வேலை, கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் சிலர் அதில் திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு நிறுவனத்துக்காக வேலை செய்வதைவிட, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது அவர்களுடைய லட்சியமாக இருக்கும். இதற்காக தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து, இருக்கின்ற வேலையை உதறிவிட்டு, ஒரு தொழிலை தொடங்கி சாதனையும் படைப்பார்கள். அந்த வகையில் சி.ஏ. வேலையை உதறிவிட்டு சொந்தமாக துரித உணவகம் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மாதந்தோறும் ரூ.4.5 கோடி சம்பாதிக்கிறார் ஐஐஎம் பட்டதாரி பெண் திவ்யா ராவ்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் திவ்யா. குடும்ப நிதி நெருக்கடி காரணமாக விரும்பியதை சாப்பிட முடியாத நிலையை சந்தித்துள்ளார். நன்றாக படித்தால்தான் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே அவருக்கு தோன்றி உள்ளது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்தினார்.கடின உழைப்பால் 21 வயதிலேயே பட்டய கணக்காளர் (சிஏ) படிப்பை முடித்து சாதனை படைத்தார். அதன் பிறகு புகழ்பெற்ற அகமதாபாத் ஐஐஎம்-ல் எம்பிஏ படித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE