இயற்கை 24X7 - 42: மக்கள்தொகை அரசியல்

By நக்கீரன்

உணவு தானியங்கள் அனைத்தும் நேரடியாக மக்கள் வயிற்றுக்குச் செல்வதில்லை. அவற்றில் கணிசமானவை ஆலைகளுக்கும் பண்ணைகளுக்கும் செல்கின்றன. அவை உணவுப் பற்றாக்குறையை உருவாக்குவதோடு கரிம உமிழ்வையும் ஏற்படுத்துகின்றன. 2020 ஜூலையில் வெளியான ஓர் அறிக்கையின்படி (EAT- Lancet Commission) உலக நாடுகளில் 10% நாடுகளைக் கொண்டிருக்கும் ஜி20 நாடுகள், உலக மக்கள்தொகையில் 64%ஐ பெற்றுள்ளன. ஆனால், 75% உலகளாவிய உணவு உமிழ்வுக்கு அவை காரணமாகின்றன.

அதனால்தான், “தற்போதைய உணவு உற்பத்தியைக் கொண்டு 2050இல் நாம் எதிர்பார்க்கிற மக்கள் தொகையான 1,000 கோடி மக்களுக்கும் உணவளிக்கலாம். ஆனால், உணவு தானியங்களின் ஆலைப் பயன்பாட்டு முறை ஏறக்குறைய 100 கோடி மக்களின் பசியைப் போக்காமல் உயிரி எரிபொருளாகவும் பண்ணை விலங்குகளின் கால்நடைத் தீவனங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன” என்கிறார் ஃபிரெட் மேக்டஃப்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE