வட இந்திய மக்கள் ஆண்டுதோறும் வானிலையின் இருமுனை உச்சங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். அதோடு, மழைக்காலத்தின் அபாயங்களையும் அவர்கள் சமாளித்தாக வேண்டும். கோடையைத் தாண்ட, குறைந்தபட்சம் வெப்பத் தணிப்பானின் (வாட்டர் கூலர்) தயவு வேண்டும்; குளிர்காலத்தைச் சமாளிக்க, சூடேற்றும் கருவி (ஹீட்டர்) வைத்தேயாக வேண்டும். கோடைக்கும் வாடைக்கும் இரண்டு வகையான உடைகள்; பள்ளிகளுக்கு இரண்டு வித நேர ஒழுங்குகள்.
அதேநேரம், வீடற்றோரின் நிலைமையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. வெப்ப அலை, குளிர் அலையில் இறந்து போகிறவர்களின் புள்ளிவிவரம் பெரும்பாலும் இவர்களைப் பற்றியவை. புதுடெல்லியில் குடிசைவாழ் மக்களின் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பிடங்கள் பசுமைப் போர்வை அற்றவையாக இருக்கின்றன; விளையாட்டுத் திடல்களாக வழங்கப்பட்ட இடங்கள் குப்பைக் கிடங்குகள் ஆகியிருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்