சின்ன வயதில் இருந்தே காலையில் எழுந்ததும் செய்தித்தாளில் கண் விழிப்பது வழக்கம். அதில் யானைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கும்போது, “இங்கே பாரு யானை. நான் அந்தக் காலத்தில் இரவு வேளையில் பயணம் செய்யும்போது எத்தனை யானைகளைப் பார்த்திருக்கேன் தெரியுமா?” என்று ஆரம்பித்து யானைகளைப் பற்றி அப்பா கதைகதையாகக் கூறுவார். அப்போது ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படும்.
சின்ன வயதில் யானையைப் பற்றி அப்பா சிலாகித்துக் கூறக் கேட்ட நான், என்னையும் அறியாமலே யானையைப் பெரிதும் நேசிக்கத் தொடங்கிவிட்டேன். அதனால்தான் சத்தியமங்கலம் - மைசூரு சாலை, உடுமலை - மூணாறு சாலை ஆகியவற்றில் உறவினர்களுடன் செல்லும்போது யானைக் கூட்டம் தென்படுகிறதா என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். நிறைய யானைகளைப் பார்த்தும் இருக்கிறோம். அவற்றைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்