`சென்னை பறவைப் பந்தயம்' எனும் இயற்கை சார்ந்த போட்டிக்காக சென்னை முழுக்க ஒரே நாளில் ஒரு முறை சுற்றினோம். எரிபொருளை வீணாக்கும் தனிநபர் வாகனங்களில் அல்லாமல், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி சென்னை சுற்றுவட்டாரத்துக்குள் ஒரே நாளில் அதிகமான பறவை வகைகளை நோக்கலாம் எனப் பேராசிரியர் த.முருகவேள் தலைமையிலான எங்கள் குழு முடிவெடுத்திருந்தது.
அதில் ஓர் இடமாக அடையாற்றின் நிரந்தர அடையாளங்களில் ஒன்றான தியசாபிகல் சொசைட்டி என்று அறியப்படும் பிரம்மஞான சபைக்குள் பறவைகளைப் பதிவுசெய்துகொண்டிருந்தோம். அடையாற்றின் தென்கரையில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் 140 ஆண்டுகளாக அந்த வளாகம் அமைந்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்