வறண்ட கந்தக பூமியான கோவில்பட்டியில் இருந்து, தாமிரபரணி பாயும் நெல்லைச் சீமைக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய புதிதில், வாடகைக்கு வீடு பார்க்க அலைந்தபோது, “இந்த ஏரியாவில் வீடு நல்லா இருக்கும் சார். நல்ல தண்ணி இணைப்பு இருக்கு. தொட்டி ரொம்பி வழியும் அளவிற்குத் தண்ணீர் தினமும் வரும்.
போர் தண்ணியும் இருக்கு. பக்கத்துல பிள்ளையார் கோயில்கூட இருக்கு” என்றெல்லாம் சொல்வார்கள். பத்து நாள்களுக்கு ஒருமுறை குடிநீரைப் பார்த்துப் பழகிய எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். ‘ஆத்துத் தண்ணீரா...’ தினமுமா என்று அதிசயத்தில் வாயைப் பிளந்தது உண்டு. தினமும் ஆற்றில் போய்க் குளிக்க வேண்டும் என்கிற ஆசைகூட இருந்தது. அப்புறம் மாதம் ஒருமுறைகூடக் குளிக்க முடியாமல் போனது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்