கடந்த சில நூற்றாண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பசுங்குடில் வாயு வெளியேற்றத்தின் காரணமாகக் காலநிலையில் நிகழ்ந்துவரும் மாற்றங்களின் விளைவுகளை, 21ஆம் நூற்றாண்டில் வாழும் மக்களும் வன உயிர்களும் சந்தித்துவருகிறார்கள். 2023 டிசம்பரில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களும் தென் மாவட்டங்களும் வெள்ளத்தில் சிக்கித் திணறியது சமகால உதாரணம். புவி வெப்பமாதலின் விளைவாக நன்னீர்ப் பற்றாக்குறை, உணவுப் பொருள் தட்டுப்பாடு, பொருளாதார மந்தம், வேலையின்மை, தொற்றுநோய்ப் பெருக்கம் போன்ற நெருக்கடிகள் உருவாகின்றன. 2030ஆம் ஆண்டு தொடங்கி, உலகெங்கும் ஒரு வருடத்திற்குக் கிட்டத்தட்ட 560 இயற்கைப் பேரிடர்கள் நிகழலாம் என்றும், 3-10 கோடி பேர் வரை வாழ்வாதாரங்களை இழந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்