உலக அளவில் கடந்த 2021 ஆம் ஆண்டு 23 உயிரினங்கள் அற்றுப் போய்விட்டன. கடந்த 500 வருடங்களில் அழிந்துபோன விலங்குகளின் பட்டியலைப் பார்த்தால் அதில் 52% எலிகள்தாம். நாம் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய முள்ளம்பன்றியும் எலி குடும்பத்தைச் சேர்ந்ததே. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பாலூட்டிகளில் 110 விலங்குகள் எலிகள்தாம்.
பொதுவாக எலிகள் தொல்லை தருபவையாக கருதப்பட்டாலும், காட்டில் உள்ள சில அரிய வகைப் பாறை எலிகள் பருந்து, பறவைகளுக்கு இரையாகவும், பல வகைப் பாம்புகள், பூனை, கீரிகளுக்கு முதன்மை உணவாகவும் உள்ளன. பொதுவாக உயிரினங்கள் அற்றுப்போக மூன்று காரணங்கள் உள்ளன: வாழிடம் சுருங்குதல், வாழிடம் மாசுபடுதல், எண்ணிக்கையில் குறைதல்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்