எனது கிராமமான மன்னங்காடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஒன்றுடன் இன்னொன்று இணைந்த பல ஓடைகள் சூழ்ந்து அமைந்த நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் நிறைந்த ஊர் அது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடைக்கால மாலை வேளையில், மன்னங்காட்டின் பறவை வகைகளைப் பற்றிப் பெரியவர் ஒருவரிடம் கேட்டேன்: ‘கொக்கு மடையான்தான் இங்கே இருக்கு, வேற ஒன்னும் வர்றது இல்லயே’ என்றார்.
‘அறிஞரும் கண்டிராத, கற்பனைக்கு எட்டாத தோற்றங்களிலெல்லாம் கோடானுகோடி வகைகளில் உயிரினங்கள் உலகில் உள்ளன’ என கம்ப நாடன் ஆரண்யக் காண்டத்தில் கூறுகிறானே, நம்மூர் அதற்கு விதிவிலக்கோ என்று எண்ணித் தளர்ந்தவாறு ஓடையின் கரையில் நடக்க ஆரம்பித்தேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்