பூச்சிகள் என்றதும் நம் மனதில் தோன்றுவது விவசாயப் பயிர்களுக்கும் உணவுப் பொருள்களுக்கும் அவை இழைக்கும் தீங்குகளே. இருப்பினும், வேளாண் பயிர்களுக்குத் தீங்கு இழைக்கும், அதாவது Pest என்ற வரையறையின் கீழ் வரும் பூச்சிகளின் வகைகள் மிகக் குறைவு. நன்மைசெய்யும் பூச்சிகள் இருந்தால் மட்டுமே வேளாண் உற்பத்தியும் காடுகளின் பரப்பளவும் அதிகரிக்கும். தாவரம், பூச்சிகளுக்கு இடையிலான சார்புநிலையைச் சூழலியல், பரிணாம வளர்ச்சியின் கண்ணோட்டத்துடன் பார்த்தால் நமக்குப் பூச்சிகளைப் பற்றிய வேறு ஒரு புதிய புரிதல் கிடைக்கும்.
தாவரங்களுக்கும் பூச்சிகளுக்கும் இடையிலான உறவு என்பது 40 கோடி ஆண்டுகள் பழமையானது. மகரந்தச் சேர்க்கைக்காகப் பூச்சிகளைக் கவர்ந்து இழுப்பதற்குப் பல வேதிப்பொருள்களைத் தாவரங்கள் உற்பத்தி செய்கின்றன. அதே நேரத்தில் இலை, பூ, பழம், விதை, வேர் போன்ற பாகங்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவும் தாவரங்கள் பல்வேறு வகையான வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்