குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1952: ராஜேந்திர பிரசாத்தும் நான்கு சுயேச்சைகளும்!

By டி.கார்த்திக்

இந்தியாவின் 16ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்கு மதிப்பு 6,05,366. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜேந்திர பிரசாத் களமிறக்கப்பட்டார். இந்தியா 1950ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் குடியரசு நாடாக உருவெடுத்தது. இதனையடுத்து இடைக்கால குடியரசுத் தலைவராக இதே நாளில் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார். இடைக்கால குடியரசுத் தலைவராக இருந்த அவர்தான் முதல் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE