பொதுத்தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு..

By ஆதலையூர் சூரியகுமார்

ஆண்டுப் பொதுத்தேர்வைச் சித்திரைக் கொண்டாட்டம் என்றுதான் ஆசிரியர்கள் சொல்வார்கள். தேர்வு என்பதை மாணவர் களும் இப்படிக் கொண்டாட்டமாகவே எதிர்கொள்ள வேண்டும். ஒரு புத்தகம் படிக்கும்போது சில பக்கங்களைப் புரட்டுவது போன்றதுதான் தேர்வுகளும். புத்தகங்களைப் புரட்டுவதுபோல வாழ்க்கையின் சில பக்கங்களான தேர்வு களையும் புரட்ட வேண்டிய தருணம் இது. இதற்காகப் பதற்றப்படத் தேவையில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பினருக்கு இது மூன்றாவது (10, 11) பொதுத்தேர்வு என்பதால் பழகி இருப்பீர்கள்‌.‌ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுபவர்களுக்குத்தான் சற்று பயம் இருக்கும். இந்தப் பயம் தேவையற்றது. பள்ளியில் நடைபெறும் தேர்வு அறையில் உங்கள் வகுப்பாசிரியர் கண்காணித்திருப்பார். பொதுத்தேர்வு அறையில் வேறு பள்ளியின் ஆசிரியர் இருப்பார், அவ்வளவுதான் வேறுபாடு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE