தமிழ் இனிது - 34: இலக்கணப் போலி தெரியுமா?

By நா.முத்துநிலவன்

தசையும் சதையும்: தமிழில் ‘தசை’ எனும் சொல்லைப் புறநானூறு (மான்தசை-177) முதலான இலக்கியங்களும், அகரமுதலிகளும் (Dictionary) சொல்கின்றன. பாரதியார், புகழ்பெற்ற ‘நல்லதோர் வீணை' பாடலில் ‘தசையினைத் தீ சுடினும்' என்கிறார். இந்தத் ‘தசை’ இப்போது, ‘சதை’ என்றே முன்-பின்னாகப் புழங்குகிறது. எழுத்தாளர் பலரும் பேச்சு வழக்கில் உள்ள இச்சொல்லையே பயன்படுத்துகின்றனர். ‘சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே' – கவிஞர் இன்குலாப். ‘ரத்தமும் சதையுமா’ வழக்கில் உள்ள இந்த மாற்றத்தை இலக்கணமும் ஏற்றுக் கொள்கிறது.

அலரி, கதுவாலி தெரியுமா? - இல்வாய்-வாயில்–வாசல், கால்வாய்–வாய்க்கால், புறநகர்-நகர்ப்புறம், முன்றில்-இல்முன், அலரி-அரளி, கொப்புளம்-பொக்குளம், கதுவாலி-கவுதாரி (கௌதாரி), தானைமுன்-முன்றானை (முந்தானை), புறக்கடை - கடைப்புறம் ; இப்போது ‘புழக்கடை’ என்றே புழங்குகிறது. இவ்வாறு, சொல்-பொருள் மாறாத வகையில், எழுத்துகள் மட்டும் இடம் மாறுவதை, ‘இலக்கணப் போலி’ என ஏற்கிறார் நன்னூலார் (267) இதற்காகப் பொருள் பொருந்தாத வகையில், சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE