தமிழ் இனிது - 33: ஜெயகாந்தனின் ‘இலக்கணம்’ சரியா?

By நா.முத்துநிலவன்

‘ஒரு’ ‘ஓர்’ - வரும் இடங்களை நினைவு படுத்திக்கொள்வோம். வரும் சொல் உயி ரெழுத்தில் வந்தால் ‘ஓர்’ வரும் (ஓர் உலகம்). வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால் ‘ஒரு’ வரும் (ஒரு வீடு). இவை போலும் சில சொற்களில் ‘இது இங்குதான் வரும்’ என்னும் படியான சொற்கள் பல உள்ளன. இவை வரக்கூடிய இடம் அறிந்து பயன்படுத்தினால் தொடர்களின் பொருளும் அழகும் கூடுமல்லவா?

‘ஆல்’ ‘ஆன்’ எங்கே வரும்? - ‘ஆல்’ ‘ஆன்’ - மூன்றாம் வேற்றுமை உருபுகள், எங்கே வரும்? வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால், ‘ஆல்’ வரும். ‘காலத்தினால் செய்த நன்றி’ (குறள்-102). வரும் சொல் உயிர் எழுத்தில் வந்தால், ‘ஆன்’ வரும். ‘ஒல்லும் வகையான் அறவினை’ (குறள்-33). இரண்டும், ஒரே குறளில் - ‘புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்’ (குறள் 298).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE