தமிழ் இனிது - 31: இறகு, சிறகு - வெவ்வேறா?

By நா.முத்துநிலவன்

கவிஞர் நேசன்மகதி, விளம்பரம் ஒன்றை ‘வாட்ஸ்-அப்' குறுஞ்செய்தியாக அனுப்பி, ‘கெடிகாரமா? கடிகாரமா?’ என்று கேட்டார். ‘விநாயகர் வடிவ கெடிகார விற்பனை’ எனும் விளம்பரமும் இருந்தது. உமறுப் புலவரின் ஆசிரியர் கடிகை முத்துப் புலவர் வந்து நமது மண்டையில் தட்ட, ‘கடிகை, கடிகாரம்தான் சரி’ என்றேன் (நன்றி: தமிழ்-தமிழ் அகர முதலி–த.நா.பாடநூல் கழகம்-பக்கம்-247/1985). வெண்கல மணி ஓசையில் காலம் அறிந்ததால், கடிகாரம் ஆனது. அளவில் சிறியது, கைக்கடிகாரம் ஆனது.

‘பாசமலர்’ படத்தில் 'மலர்ந்தும் மலராத' பாடலில் ‘தங்கக் கடியாரம்’ என்று பி.சுசீலா பாட, கண்ணதாசன் ‘கடிகாரம்' என்றே எழுதியிருக்கிறார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘நான்மணிக் கடிகை’ பொ.ஆ.4ஆம் நூற்றாண்டினது. ‘கடிகை வெண்பா’ - அரசனுக்கு நேரம் சொல்லும் ஒரு சிற்றிலக்கியம். கடிகை - நேரம் அளவிடுவது. மதுரைக் காஞ்சி-532, நெடுநல் வாடை-142, கலித்தொகை-96/10, அகநானூறு-35/3 என சங்க நூல்களில் வரும்.
பிறகு கடிகை - கடிகாரம், கெடிகாரம் ஆனது எப்படி? கங்கை – கெங்கை என்றும் (குடியாத்தம் கெங்கையம்மன் கோயில்), கரகம் – கெரகம் (கரகாட்டக்காரன் - கோவை சரளா) என்றும் பேச்சு வழக்கில் ‘க’, ‘கெ’ ஆனது போல, ‘கடிகாரம்’, ‘கெடிகாரம்’ ஆகியிருக்கலாம். ஆனால், பெருவழக்கிலும் எழுத்திலும் ‘கடிகாரம்’ என்பதே சரியான தமிழ்ச்சொல். என்ன செய்ய? கடிகாரத்திற்கே ‘நேரம்’ சரியில்லை போல. ‘கெரகம்’தான்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE