தமிழ் இனிது 29 - ‘விவரம்’ தெரியாமல் ‘விபரம்’ எனலாமா?

By நா.முத்துநிலவன்

கூடு - கூண்டு: தேனீக்களும் பறவைகளும் தாம் வாழ, தாமே கட்டுவது கூடு (Nest). தேன்கூடு, குருவிக்கூடு போல. மனிதர்கள் வீடுகட்டி வாழக் கற்றுக்கொண்டதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்களும் குருவிகளும் கூடுகட்டி வாழ்ந்தன என்கிறது அறிவியல். பறவை, விலங்குகளை அடைக்க, மனிதர் கட்டுவது கூண்டு (Cage). ‘கூண்டுக்கிளி’ என்னும் ஒரே படத்தில் தான் எம்ஜிஆர், சிவாஜி எனும் இருபெரும் நடிகர்களும் இணைந்து நடித்தார்கள். கூட்டுப் பறவையைக் கூண்டில் அடைப்பது இயற்கைக்கு எதிரானது. உலக உயிரினங்களில் இளைய (Junior Most) உயிரினமான மனிதர், ‘உலகம் முழுவதும் தமக்கே உரிமை’ என நினைப்பது, தமக்குத் தாமே கட்டிக்கொள்ளும் கூண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE