தமிழ் இனிது 24: மேன்மேலும் தவறு செய்யாதீர்!

By நா.முத்துநிலவன்

தவறாமல் / தவிராமல்: அழைப்பிதழில் ‘தவறாமல் வருகை தர’ கேட்டுக் கொள்கிறார்கள். வருவதைத் தவிர்த்து விடாமல் - தவிர்க்காமல் - தவிராமல் வந்துவிட வேண்டுகிறோம் என்னும் பொருளில்தான் ‘தவறாமல்’ எனும் சொல்லில் அழைக்கிறார்கள். ஆனாலும், இது சரியான சொல் அன்று. அழைப்பதை ஏற்று வருவதில் தவறு, தப்பு ஏதும் உள்ளதா என்ன? எனவே, தவிராமல் (அ) தவிர்க்காமல் வருகைதர அழைப்பதே சரி.

ஏற்கனவே / ஏற்கெனவே: ஒரு திரைப்படத்தில் வரும் ‘எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ..’ வரிகளைக் கவிஞர் வைரமுத்து சரியாகவே எழுதி, பாடியவரும் சரியாகவே பாடியிருக்கிறார். எனினும் இணையத்தில் வழக்கம்போல, ‘ஏற்கனவே’ என்றே உள்ளது. மின்னூலாகவும் கிடைக்கும் ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு நாவலும்கூட ‘ஏற்கனவே’ என்றே வந்துள்ளன. ஆனால், ‘முன் சொன்னதற்கு ஏற்க-எனவே’ எனும் பொருள் தரும் இதற்கு, ‘ஏற்கெனவே’ (முன்னதாகவே-Already) என்பதுதான் சரியான பொருள் தரும் சொல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE