தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ‘சிறந்த திருநங்கை’ விருது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி. ஐஸ்வர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிராமிய நடனக் கலைஞர், நாடகக் கலைஞர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம் கொண்ட ஐஸ்வர்யா, திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காகக் கடந்த 22 வருடங்களாகச் செயல்பட்டுவருகிறார். தற்போது பல துறைகளிலும் திருநங்கைகள் சாதிக்கத் தொடங்கிவிட்டனர் என நம்பிக்கை தெரிவிக்கும் ஐஸ்வர்யா அவர்களை முன்னேற்றப் பாதையில் ஒருங்கிணைக்கும் பணியை அர்ப்பணிப்புடன் செய்துவருகிறார்.
திருநங்கையாக ஆவதற்கு முன்பு பெற்றோர்கள் அவருக்கு இட்டிருந்த பெயர் அசோக். அம்மா, அப்பா, இரு அக்காக்கள் எனக் குடும்பத்தின் கடைக்குட்டியாகப் பிறந்த அசோக், ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்தார். விஷயம் கேள்விப்பட்டதும் அவருடைய அம்மா, “பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி எப்போதும் நீ என்னுடைய குழந்தைதான்” என்று அவரை அரவணைத்துக்கொண்டார். அம்மாவின் அரவணைப்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் 19 வயதில் திருநங்கையாக மாறினார் அசோக்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்