பவுனுக்கு நாப்பது வயதாகிவிட்டது. ஆனால், எப்போதும் விரக்தி அடைந்தவள்போல் உம்மென்று இருப்பாள். எதற்கும் சிரிக்க மாட்டாள். யாரிடமும் பேசவும் மாட்டாள். கேட்ட கேள்விக்கு மட்டும் ‘ம்...ம்’ என்று உம் கொட்டுவாள். தினமும் வேலைக்குப் போவாள். போகிற இடத்தில் வெறும் உம்மண்ணா மூஞ்சிதான். அவளுக்கு இருபது வயதிலேயே கல்யாணம் முடிந்தது. ஆறு மாதம் அவள் கூட இருந்த புருசன் அதன் பிறகு எப்பப் பார்த்தாலும் ‘எளவு’ எடுத்த வீடு மாதிரி மொகத்தத் தூக்கி வச்சிக்கிட்டுப் பேசக்கூட மாட்டேங்கிறவ கூட என்னால குடும்பம் நடத்த முடியாது என்று சொல்லிவிட்டு அவன் போயே போய்விட்டான்.
இவள் வயதுக்காரர்கள் எல்லாம் காட்டில் கலகலவென்று வேலை செய்துகொண்டிருக்கும்போது இவள் மட்டும் பேசாமல் வேலை செய்வாள். அதுவும் சுறுசுறுப்பாகவும் செய்ய மாட்டாள். அவளிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகும் கோசலை, “ஏண்டி எப்பப் பாத்தாலும் இப்படி இருக்கே. நல்லா சிரிச்சிப் பேசிப் பழகி இரேன். நீ இப்படி இருக்கப்போயிதேன் உன் புருசன் உன்ன விட்டுட்டுப் போயிட்டான். சரி அவன் போய்த் தொலையட்டும் உன்கூட இருக்க உன் அய்யா, அம்மா எல்லார் கூடயும் அண்ணன், தம்பின்னு அம்புட்டுப் பேர் கூடவும் நல்லா சந்தோசமா பேசிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கலாமில்ல” என்று சொன்னதும் பவுனுக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago