அநுத்தமா: அணையா தீபம்

By ப்ரதிமா

பெண்களின் புற – அக வாழ்க்கையை எவ்வித நகாசுமின்றிப் பட்டவர்த்தனமாகப் பதிவுசெய்தவர் அநுத்தமா. 1900களின் மத்தியில் எழுதவந்தவர்களில் அநுத்தமாவின் எழுத்து தனித்துவமானது. நூற்றாண்டைக் கடந்த பிறகும் அநுத்தமாவின் எழுத்து அர்த்தமுள்ளதாக இருப்பது அவரது படைப்புத்திறனுக்குச் சான்று. அதே நேரம் தனது படைப்புகளில் அவர் சுட்டிக்காட்டிய குடும்ப அமைப்பின் அழுத்தத்திலிருந்து பெண் சமூகம் இன்றைக்கும் முழுதாக விடுபடவில்லை என்பது வேதனையானது.

இன்றைய ஆந்திரத்தின் நெல்லூரில் 1922 ஏப்ரல் 16 அன்று அநுத்தமா பிறந்தார். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி. பள்ளி வயதில் பத்மநாபனுடன் திருமணம். திருமணத்துக்குப் பிறகு பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்வானார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE