கலுசுலிங்கத்திற்கு ஆடு மேய்ப்பதுதான் வேலை. ஆனால், அவர் யார்கூடவும் சேர்ந்து மேய்க்க மாட்டார். பாட்டு பாடுவது என்றால் அவருக்கு எப்போதும் பிரியம். வீட்டில் வேலை செய்யும் போதெல்லாம் பாட்டு பாடுவார். அப்போது அவர் பொண்டாட்டி, மகள், மகன், மச்சான் என்று எல்லோரும், ‘வீட்டுக்குள்ள எதுக்கு ஒப்பாரி வைக்கீக? உமக்கு பாடனுமின்னா எங்கிட்டும் போயி ஒத்தையா பாடும். இங்கன கிடந்து கத்தாதீரும்’ என்பார்கள். இதனால் மனம் நொந்துபோய் வாயை மூடிக்கொண்டு வேலை பார்க்கிறவர் பாட்டுப் பாடுவதற்காகவே வெள்ளனத்திலேயே கெடைக்குக் கிளம்பிவிடுவார்.
அவர் பொழுதுக்கும் பாடுவார் என்று தெரிந்தே அவருடன் ஆடு மேய்ப்பவர்கள் எல்லோரும் எடக்குக்காக, ‘எய்யா என்கூட ஆடு மேய்க்கவாரும், சீயான் என்கூட ஆடு மேய்க்க வாரும்’ என்று நயிப்பாக பேசி கூப்பிடுவார்கள். இவருக்குத் தெரியும் அவர்கள் இவரை பாடச் சொல்லி எப்படியெல்லாம் எக்காளமும் எசக்கேடும் பண்ணுவார்கள் என்று. அதனால், ‘போங்கடா போக்கத்த பயகளா. உங்ககூட வர எனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு?’ என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு ராவுகிரி மலையோரம் ஆடுகளைப் பத்திக்கொண்டு சென்றுவிடுவார். அங்கே ஒரு சனம் இருக்காது. தரவும், புற்களும், மரங்களும், நிறைந்திருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago