வானவில் பெண்கள்: சேலை அணிந்தும் உடற்பயிற்சி செய்யலாம்!

By கார்த்திகா ராஜேந்திரன்

உடற்பயிற்சி செய்ய உடை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சேலை அணிந்து வலுதூக்குகிறார் 56 வயது சோமசுந்தரி மனோகரன். சென்னை படப்பை பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசியான இவர் ‘பவர் லிஃப்டிங்’ எனப்படும் வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றவர். இரண்டு குழந்தைகளின் தாயான இவர் தனது 50ஆவது வயதில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கடந்த ஆறு வருடங்களாக வலுதூக்கும் பயிற்சி செய்துவருகிறார்.

“குழந்தைகளின் படிப்புக்காகக் கிராமத்தி லிருந்து நகரத்திற்குக் குடிப்பெயர்ந்தோம். நெசவு, விவசாயம் என வேலைசெய்துவந்ததால் ஆரோக்கியமாக இருந்தேன். நகரத்திற்கு வந்த பிறகு உடல் பருமன், கால் வலி என ஒவ்வொன்றாக வரத் தொடங்கியது. போதுமான உடலுழைப்பு இல்லாததால்தான் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனப் புரிந்தது. ஒரு பக்கம் சிகிச்சை எடுத்தபடியே மறுபக்கம் உடலுழைப்பை அதிகரிக்க என்ன செய்யலாம் என யோசித்தேன். என் மகன், எங்கள் வீட்டின் கீழ்ப்பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்திவருவதால் அங்கு சென்று அவ்வப்போது வலுதூக்கும் பயிற்சிகளைச் செய்யத் தொடங்கினேன். என் மகன் எனக்குப் பயிற்சி அளிப்பதைப் பார்த்து என் மருமகளும் இதில் இணைந்துகொண்டார். ஒவ்வொரு பயிற்சியாகக் கற்றுக்கொண்டு இப்போது 65 கிலோ ஸ்குவாட், 45 கிலோ பெஞ்ச் பிரெஸ், 100 கிலோ டெட் லிஃப்ட் போன்றவற்றைச் செய்கிறேன்” என்றார் சோமசுந்தரி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE