பெண்கள் 360: பெண்களுக்கும் இடமுண்டு!

By செய்திப்பிரிவு

இந்தக் காலத்தில் பெரும்பாலான பெண்கள் படிக்கிறார்கள். படித்து முடிக்கும் பெண்கள் எல்லாருக்கும் தகுந்த வேலை கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே இன்றைய நிலைமையும்கூட. இந்தந்த வேலைகள் மட்டுமே பெண்களுக்கானவை என்கிற பாகுபாடு இப்போதும் பணியிடங்களில் இருக்கிறது. இந்தச் சூழலில் ‘அவதார் ஸ்டடி’ என்கிற நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் இந்திய நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்திருக்கிறது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் சென்னைக்கு அடுத்ததாக புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களும், லக்னோ, ராஞ்சி, கவுகாத்தி ஆகிய நகரங்கள் கடைசி மூன்று இடங்களையும் பிடித்திருக்கின்றன. அதே போல பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்களில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு தரும் நகரங்களாக திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் தெற்கு, வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த நகரங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகமாகவும், வடக்கு, மத்திய, கிழக்கு நகரங்களில் வாய்ப்பு குறைவாகவும் வழங்கப்படுவதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE