பெண்கள் 360: பெண் ஊழியர்களுக்கு இடம் இல்லையா?

By செய்திப்பிரிவு

ட்விட்டர் நிறுவனத்தை 3.65 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாகப் பொறுப்பு வகித்துவந்த பராக் அகர்வாலைப் பணிநீக்கம் செய்தார். ட்விட்டரில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என அடுத்தடுத்து ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் பாதிப் பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் பெண்கள் அதிகம் குறிவைக்கப்பட்டதாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட கரோலினா பெர்னல், வில்லோ ரென் ஆகிய இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் 57 சதவீதப் பெண்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் தாய்மார்கள் அல்லது திருமணமானவர்கள் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்தது மட்டுமன்றி புதிதாகப் பணியில் சேர்க்கப்படுவர்களில் ஆண்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE