தினமும் மனதைக் கவனி - 5: பாரத்தோடு பயணம் ருசிக்காது

By செய்திப்பிரிவு

கைபேசி, இணையதளம், தொலைக் காட்சி, போதைப் பொருள்கள் இவையும் பதின்ம வயதினரை ஆட்டிப் படைக்கும் மாயைகள்தாம். உணர்வுகளால் உந்தப்பட்டு வழிதவறாமல் இருக்க வேண்டுமானால், உணர்வுகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசவேண்டும். நமது எண்ணங்களில் இருந்துதான் உணர்வுகள் வருகின்றன. அவை எண்ணங்களை மேலும் தீவிரமடையச் செய்யும்போது, உணர்வுகளின் வீரியம் கூடுகிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆக, அடிப்படையில் எண்ணங்கள் தாம் மூலகாரணம்.

எதிர்மறை எண்ணங்கள், உங்கள் எதிரி. தனது உண்மையான தகுதியைவிடத் தன்னைக் குறைத்து மதிப்பிடும் பெண்கள் எதையுமே எதிர்மறையாகத்தான் பார்ப்பார்கள். ‘நான் அழகாக இல்லை; அதனால்தான் ஆண்கள் என்னைப் பார்ப்பதில்லை’, ‘நான் மண்டு, என்னால் மார்க் வாங்கவே முடியாது’, ‘இன்று என் பிரசன்டேஷனை ஒரு தோழி மட்டமாகப் பேசிவிட்டாள்; நான் ரொம்ப வேஸ்ட்’… இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள்தாம் வருத்தம், ஏமாற்றம், எரிச்சல், கோபம், அவமானம், பயம், பதற்றம், குற்றவுணர்வு, பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகளின் பிறப்பிடம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE