பெண்கள் 360: பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

By பிருந்தா சீனிவாசன்

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 31 வயது மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9 அன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். பணியின் போது மருத்துவமனைக்குள் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலரான சஞ்சய் ராய் என்பவர் இந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட மருத்துவரின் உடலில் உள்ள காயங்களை வைத்துப் பார்க்கும்போது இந்தக் கொலையை ஒருவர் மட்டுமே செய்திருக்க முடியாது எனவும் இந்தக் கொலையில் தீவிர விசாரணை வேண்டும் எனவும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மருத்துவரின் கொடூர மரணத்தையொட்டி நாடு முழுவதும் மருத்துவப் பணியாளார்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவச் சங்கமும் 24 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது. மருத்துவரின் கொலை தொடர்பான விசாரணையில் மாநில அரசின் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே குற்றச் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் வேலையும் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்காமல் குற்றாவாளிகளைக் கண்டறிந்து தண்டனையளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE