உடல் பருமனால் தொந்தரவுக்கு உள்ளானவர்களால் அதிகம் கேட்கப்பட்ட வாசகம், ‘நீ எந்தக் கடையில அரிசி வாங்குற?’ என்பதாகத்தான் இருக்கும். எடை அதிகமாக இருப்பவர்கள் அதிகம் தின்பார்கள், அதுவும் அரிசி சாப்பிடுவதால்தான் எடை கூடுகிறது என்கிற அரிய தத்துவங்களைக் கண்டறிந்து முனைவர் பட்டம் பெற்றவர்களால் உருவாக்கப்பட்டதே இந்த வசனம்.
வருடக்கணக்கில் எண்ண முடியாத உதடுகளால் இந்த வசனம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் செல்கையில் எதிரில் வந்த ஒருவன், “எந்தக் கடையில அரிசி வாங்குற?” எனச் சொல்லிவிட்டுப் போனபோது உலகமே இடிந்து விழுந்துவிட்டது போலத் துவண்டுபோன நினைவு அப்படியே ஈரம் மாறாமல் இருக்கிறது. யார் யாரையோ சொல்லிக் கேள்விப்பட்டிருந்த நம்மை, இப்படி ஒருவன் சொல்லிவிட்டானே எனத் தாங்க முடியாமல் அன்று முழுவதும் அழுதேன். வாழவே தகுதி இல்லை என்கிற ரீதியில் அந்த எண்ணம் நீண்டுகொண்டே போனது. உடன் பழகியவர்கள் எல்லாம் தோற்றத்தில் ஒல்லியாக இருக்க நான் மட்டுமே ஏன் இப்படி எனக் கோயிலுக்குச் சென்று முறையிட்டுப் பிரார்த்தித்துப் புலம்பினேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்