2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்ததோடு சுதந்திரத் துக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியராகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் 22 வயது மனு பாகர் (துப்பாக்கிச் சுடுதல்).
இதற்கு முன் ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக்கும் (மல்யுத்தம்) டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானுவும் (பளுதூக்குதல்) 2016, 2020ஆம் ஆண்டுகளுக்கான ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கங்களைப் பெற்றுத் தந்தனர். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்து பதக்கக் கணக்கை வீராங்கனைகளே தொடங்கி வைத்திருக்கிறார்கள்! 2024 ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டின் பதக்க கணக்கைத் திறந்து வைத்ததும், வட அமெரிக்கப் பிராந்தியத்தில் மிகவும் பின்தங்கிய நாடான கவுதமாலாவின் முதல் பதக்கத்தை வென்றதும் அந்தந்த நாட்டு வீராங்கனைகளே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்