அரசுப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிறவர்கள் தகுதியான பணிகளில் நியமிக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கவிருக்கும் துர்காவின் வெற்றியைப் பத்தோடு பதினொன்றாகச் சுருக்கிவிட முடியாது. அது தனித்துவமானது. நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிய தன் தந்தையின் கனவை நனவாக்குவதற்காகவே இந்த வெற்றியை அவர் அடைந்திருக்கிறார்.
மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தவர் சேகர். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்தார். தன்னுடைய ஒரே மகள் துர்கா அரசு அதிகாரியாக உயர வேண்டும் என்பதே சேகரின் கனவு. சேகரின் இறப்புக்குப் பிறகு அவருடைய மனைவி வீட்டுவேலை செய்துவருகிறார். துர்கா, மன்னார்குடி அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். பிறகு மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார். மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் நிர்மல் என்பவருடன் துர்காவுக்குக் கடந்த 2015இல் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு எட்டு வயதிலும் ஐந்து வயதிலும் இரண்டு மகள்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
19 hours ago
இணைப்பிதழ்கள்
23 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago