நாற்பது வயதுக்கு மேல் நம் வாழ்வில் பெரிதாக என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று நினைக்கிறவர்களுக்குப் பதில் சொல்வதுபோல் இருக்கிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கை. அரங்கக் கலையான நடிப்பை 42 வயதில் கற்றுக்கொண்ட இவர், தற்போது பள்ளி மாணவியருக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.
ஸ்ரீதேவி திருச்சியில், வளர்ந்தவர். மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்துவிட்டு மருத்துவமனை ஒன்றில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்களும் நெருக்கடிகளும் அதிகரித்த போது குடும்பத்துடன் 2004இல் சென்னைக்குக் குடியேறினார். நிலையான வேலையில்லாமல் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். திமுக, அதிமுக என இரண்டு பெரிய கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன என்பது மட்டுமே ஸ்ரீதேவியின் அதிகபட்ச அரசியல் அறிவாக அன்றைக்கு இருந்தது. வேலைக்குச் சென்றுவெளி மனிதர்களுடன் பழகியபோது கூடத் தனது சமூகப் பார்வை விசாலமடையவில்லை எனச் சிரிக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்