இது இணைய வர்த்தகத்தின் காலம். இணையத்தில் எதைப் பார்த்தாலும் வாங்கிக் குவிக்கும் கூட்டமும் நம்மிடையே உண்டு. அத்தியாவசியத்துக்கும் அநாவசியத்துக்குமான எல்லைகள் அழிந்துவரும் இந்தக் காலத்தில் இணைய வர்த்தகத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான களமாகவும் பயன்படுத்திவருகிறார் அபிராமி. ஈரோட்டைச் சேர்ந்த இவர், பருத்தியிலான நாப்கின்களை (அறம் காட்டன் நாப்கின்ஸ்) விற்பனை செய்துவருகிறார்.
அபிராமி எம்.பி.ஏ., பட்டதாரி. திருமணத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறியவர், குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால் வேலையை விட்டு விலகினார். கரோனா பெருந்தொற்றின்போது ராஜாபாளையம் அருகில் உள்ள தளவாய்புரத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டில் தங்கினார். “எனக்கு இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. உதிரப் போக்கு அதிகமாக இருந்தது. அதற்குச் சிகிச்சை எடுத்தபடியே நாப்கின்களில் கவனம் செலுத்தினேன். பிளாஸ்டிக்கும் வேதிப்பொருள் களும் நிறைந்த பிராண்டட் நாப்கின்களுக்குப் பதிலாகப் பருத்தி நாப்கின்களை வாங்கினேன். தரமான பருத்தி நாப்கின்களைக் கண்டறிவது கடினமாக இருந்தது. ஒருவழியாக எனக்கு உகந்த நாப்கினை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிய ஆறு மாதங்களிலேயே மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் குறைந்தன” என்று தான் இந்தத் தொழிலைத் தொடங்க ஆரம்பப் புள்ளியாக இருந்த நிகழ்வை அபிராமி பகிர்ந்துகொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இணைப்பிதழ்கள்
7 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
33 mins ago
வணிகம்
58 mins ago
உலகம்
49 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago