பெண் எனும் போர்வாள் - 13: சதி மாதா ரூப் கன்வர்?

By பிருந்தா சீனிவாசன்

அந்தப் பெண்ணின் பெயர் ரூப் கன்வர். 18 வயது ரூப் கன்வருக்கும் 24 வயது மால் சிங் ஷெகாவத்துக்கும் 1987 ஜனவரி 17இல் திருமணம். மணம் முடித்து ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இருக்கும் தியோராலா கிராமத்துக்கு ரூப் கன்வர் குடிபெயர்கிறார். கோடிக்கணக்கான இந்தியப் பெண்களின் புகுந்த வீட்டுக் கனவுகளைபோல்தான் புது வாழ்க்கை குறித்த கற்பனைகளோடு ரூப் கன்வரும் தியோராலாவுக்கு வந்திருப்பார். ஆனால், எட்டே மாதங்களில் தன் வாழ்க்கை முடிந்துவிடக்கூடும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

ராஞ்சியில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த ரூப் கன்வர், பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். 1987 செப்டம்பர் 3 அன்று தனக்கு வயிற்று வலி என்று சொன்ன ரூப் கன்வரின் கணவர், மறுநாள் இறந்துவிட்டார். அதன் பிறகு நடந்தவற்றை அந்த ஊர் மக்கள் சொன்னதாகப் பத்திரிகைகளில் பதிவான செய்தி இது:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE